நிகழ்ச்சித்திட்ட வரவுசெலவுத்திட்டம் – 2026

சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்ட வரவுசெவுத்திட்டம் கடந் 18.11.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சபையின் தவிசாளர் தி.கிருஸ்னவேணி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்போது குறித்த பாதீடு வாக்கெடுப்பு எதுவுமின்றி சபை உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் குறித்த பாதீடு பொதுமக்களின் அபிப்பிராயத்தினை பெறும்பொருட்டு சபையின் தலைமை அலுவலகம் மற்றும் உப அலுவலகம் பொதுநூலகங்கள் ஆகியவற்றில் 24.11.2025 தொடக்கம் 03.12.2025 வரை பொதுமக்கள் பார்வைக்கபாக வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குறித்த பாதீட்டினை பார்வையிட்டு தங்களது கருத்துக்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பாதீட்டு வரைவினை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

முன்பள்ளி விளையாட்டு போட்டி

வவுனியா வடக்கு பிரதேச சபை முன்பள்ளி விளையாட்டுப்போட்டி 06.11.2025 அன்று முன்பள்ளி வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, முன்னாள் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிபாளர் திரு த.இராஜேஸ்வரன், சபையின் கொளரவ உறுப்பினர்கள், சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்

கர்ப்பிணிப்பெண்களுக்கான பால்மா வழங்கும் நிகழ்வு

எமது சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சபைக்குட்பட்ட வானது வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவின் கீழ் அமைந்துள்ள புளியங்குளம் குடும்ப நல உத்தியோகத்தரின் பிரிவிலுள்ள 19 கர்ப்பிணிப் பெண்களுக்கு 2024.01.24 ஆம் திகதி அன்று சபையின் செயலாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

Provincial Best Anual Reports & Accounts/Performance Reports Awards Competition 2023

    இலங்கை பொதுநிதிக் கணக்குகள் நிறுவனத்தினால் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையே 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்கறிக்கைகளை தெரிவுசெய்கின்ற போட்டியில் பிரதேச சபைகள் பிரிவின் கீழ் வடக்கு மாகாணத்தில் உள்ள 29 பிரதேச சபைகளுள் வவுனியா வடக்கு பிரதேச சபையானது தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளது. அதற்கான வெற்றிக்கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன அனுராதபுர நகரில் உள்ள வடமத்திய மாகாணசபை கேட்போர்கூடத்தில் 22.09.2023 அன்று வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டிற்கான பாதீடு தொடர்பான கலந்துரையாடல்

2024 ஆம் ஆண்டிற்கான பொதுமக்கள் பங்களிப்புடனான பாதீடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 15.08.2023 ஆம் திகதி புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு ஆகிய கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. அதன்போது சபையின் செயலாளர் திருமதி சோதிநாயகி மணிவண்ணன், சபை உத்தியோகத்தர்கள், புளியங்குளம் வாழ் பொதுமக்கள் ஆகியோரது சமூகத்துடன் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பொதுமக்கள் தமது பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.